" மரம் வெட்டுகிற ஒருவன், சிரமப்பட்டு, பெரும் பகுதியை வெட்டி முடிக்கிறான்.
வெட்டுப்படாத, எஞ்சிய பகுதி, தன்னைதானே ஒடித்துக் கொண்டு, தரையில், தடால் என்று விழுகிறது.
மனிதன் மரத்தை வெட்டிய பகுதிக்கு நிகர்... குரு, சிஷ்யனுக்கு செய்யும் ஆத்ம பரிபாகம்
மரம் தானே ஒடிந்து விழுவது...சிஷ்யன் எடுத்துக் கொள்ளும் சுயப் பிரயத்தனம். "
" நாணல் ஒன்று தன்னளவில் நீரின் மீது மிதக்கிறது...அதன் மீது சிறு குருவி உட்கார்ந்தாலும், அது மூழ்கிவிடும்.
ஆனால், பெரிய மரக்கட்டை ஒன்றோ, தான் மிதப்பது மட்டுமில்லாமல், பல பேர் அதன் மீது உட்காரவும் இடம் கொடுக்கிறது.
தங்கள் சொந்த முக்தியைக் கவனித்துக் கொள்பவர்கள்.....நாணல் போன்றவர்.
உலகை உய்விக்க வந்த குருமார்கள்......பெரிய மரக் கட்டை போன்றவர்கள். "
Comments
Post a Comment